சொத்து ஆவணங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்...!
Posted by Unknown on 03:24 with No comments
.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து பரிமாற்றங்க ளை ஆவணத்படுத்துவது தொடர்பான பணிகள் நடை பெற்றுள்ளன.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து பரிமாற்றங்க ளை ஆவணத்படுத்துவது தொடர்பான பணிகள் நடை பெற்றுள்ளன.
.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங் கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன. இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண் டு பதிவுத் துறை ஏற்படுத்தப்பட்டது . 1899 ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறை வேற்றப்பட்டது. இத னை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்ற ப்பட்டது.
.
இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்த டுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப் பட்டு வருகின்றன.
.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண் டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவுசெய்யபடுகின்றன. இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவண ங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டு கள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந் திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங் கள் எழுதும் முறையில் பல் வேறு மாற்றங்கள் ஏற்பட் டுள்ளன.
.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவண ங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர் களின் ஆலோசனையாக உள்ளது. இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
.
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த் தைகள் இன்னமும் புரியாதவையாக வே உள் ளன.
.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன் படுத்தப்படும் பட்டா, சிட்டா, அடங்கல், கிராம நத்தம், கிராம தானம், தேவ தானம், இனா ம்தார், விஸ்தீரணம், ஷரத்து, இலாகா, கிரையம், வில்லங்க சான்று, புல எண், இறங்குரிமை, வாரிசுரிமை, தாய் பத்திரம், ஏற்றது ஆற்றுதல், அனு பவ பாத்தியதை, சுவாதீனம் ஒப்படைப்பு, ஜமாபந்தி, நன் செய் நிலம், புன்செய்நிலம், மற்றும் குத்தகை போன்ற வார்த்தைக ளும், அவற்றின் விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை படித்து தெரிந்து தெளிந்து கொள்ளுங்கள்
.
பட்டா:
ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
.
சிட்டா:
குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டு பாட்டில் உள்ளது என்பது தொடர்பா ன விவரங்கள் அடங்கிய வருவாய் த்துறை ஆவணம்.
அடங்கல்:
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத் தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்:
ஒவ்வொரு கிராமத்திலும் குடியி ருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப் பட்டுள்ள நிலம்.
.
கிராம தானம்:
கிராமத்தின் பொது பயன்பாட்டுக் காக நிலத்தை ஒதுக்குவது.
.
தேவதானம்:
கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித் தல்.
.
இனாம்தார்:
பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன் படுத்தும் சொல்.
.
விஸ்தீரணம்:
நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
.
ஷரத்து:
பிரிவு.
.
இலாகா:
துறை.
.
கிரையம்:
நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவண படுத்துதல்.
.
வில்லங்க சான்று:
ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனைசெய்த அதன் உரிமையா ளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்ப னை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
.
புல எண்:
நில அளவை எண்.
.
இறங்குரிமை:
வாரிசுரிமை.
.
தாய்பத்திரம்:
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதை ய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
.
ஏற்றது ஆற்றுதல்:
குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
.
அனுபவ பாத்தியதை:
நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
.
சுவாதீனம் ஒப்படைப்பு:
நிலத்தின் மீதான உரிமையை ஒப்ப டைத்தல்.
.
ஜமாபந்தி:
வருவாய் தீர்வாயம்.
.
நன்செய்நிலம்:
அதிக பாசன வசதி கொண்டநிலம்.
.
புன்செய்நிலம்:
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
.
குத்தகை:
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
.
இந்த வார்த்தைகளின் பயன்பாடு இருந்து வருகிறது.
Categories: செய்திகள், வாழ்க்கை வரலாறு
0 comments:
Post a Comment