மெல்லிசைக்காக ஒரு மாதம் மெனக்கிட்ட விஜய் சேதுபதி...!
Posted by Unknown on 00:25 with No comments
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் படம் மெல்லிசை.
இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரஞ்சித் ஜெயக்கொடி, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். காயத்ரி நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்திற்காக விஜய் சேதுபதி ஒரு மாத காலமாக பியானோவை கற்றுக்கொண்டு வருகிறாராம்.
ஐந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, இந்த படத்திற்காக மிகவும் ஆர்வமாக இசையை கற்றுக் கொண்டிருக்கிறார்.
படத்தின் இயக்குனர் ரஞ்சித் கூறுகையில், இந்த படத்தில் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கவிருப்பதால் பியானோ வல்லுநரிடம் முறையாக வாசிக்க கற்று கொண்டார்.
மேலும் காயத்ரியும் வயலின் ஆசிரியராக நடிக்க இருப்பதால் இந்த படத்திற்காக அவரும் வயலின் வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிரார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க இசை கலந்த மர்ம படமாக உருவாகி வருகிறது மெல்லிசை படம்
Categories: சினிமா செய்திகள்

0 comments:
Post a Comment