இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள் - உங்களுக்கு தெரியுமா..?
Posted by Unknown on 10:48 with No comments
இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்:-
1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.
2) பட்டினி கிடப்பது.
3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.
4) மிகச் சூடான பானங்களை அருந்துவது
5) சூடான உணவுப் பொருட்களை உண்பது.
6) காரமான மசாலா கலந்த உணவுகளை உண்பது
7) சத்தான உணவுவகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது.
8) குடலில் கிருமி உடையவர்கள்
9) மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல்
10) கல், மண், தூசி மற்றும் கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பது.
11) சில வகை மருந்துகளை வெகுகாலமாக மருத்துவரின் ஆலோசனை யின்றி உண்பது
மேலும் அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள்வது போன்றவைகளிலும் அல்சர் ஏற்படுகிறது.
`நொறுங்கத் திண்ணவனுக்கு நூறு வயது' என்பார்கள்.
ஆனால் இன்றைய வாழ்க்கையில் யார் அமைதியாக உட்கார்ந்து மென்று தின்கிறார்கள். யாரும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை.
இரவுக்கு கடைகளில் இரண்டு மணிக்கு கூட உண்பவர்களைப் பார்க்கிறோம். அதனால் நாம் ஓய்வு கொடுக்காத வயிறு நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது
Categories: ஆரோக்கியம்

0 comments:
Post a Comment